என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அமைச்சர் சீனிவாசன்"
மதுரை:
காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ ஆகியோர் பேசினர்.
தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்தியவர் ஜெயலலிதா. அவரது மறைவுக்கு பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியையும், ஆட்சியையும் திறம்பட நடத்தி வருகிறார்கள்.
அ.தி.மு.க. எங்களுக்குத் தான் சொந்தம் என்று தேர்தல் ஆணையமே கூறி விட்டது. ஆனால் ஒரு நபர் எப்படியாவது அ.தி.மு.க.வையும், இரட்டை இலை சின்னத்தையும் அபகரிப்பேன் என்கிறார். அவர் வேறுயாருமல்ல ஜெயலலிதாவால் விரட்டப்பட்ட டி.டி.வி.தினகரன்தான்.
அவரது நடவடிக்கைகளை கடந்த 32 ஆண்டுகளாக பார்த்து வருகிறேன். ஜெயலலிதா மீது தி.மு.க. வினர் தொடர்ந்த லண்டன் ஓட்டல் வழக்கில் தினகரனும் சேர்க்கப்பட்டு இருந்தார். ஆனால் அவர் தி.மு.க.வுடன் ரகசிய உடன்பாடு வைத்து தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவித்துக்கொண்டார்.
இதனை அறிந்த ஜெயலலிதா நம்பிக்கை துரோகம் செய்துவிட்டாய், இனி நான் சாகும்வரை என் முகத்தில் விழிக்கக்கூடாது என்று கட்சியை விட்டு தினகரனை தூக்கி எறிந்தார். ஜெயலலிதாவுக்கு தினகரன் ராஜதுரோகம் செய்த காரணத்தால் அவர் விரட்டப்பட்டார்.
அதன் பிறகு பாண்டிச் சேரியில் தினகரன் பதுங்கி இருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நான்தான் ஜெயலலிதாவின் வாரிசு என்று தொண்டர்களையும், மக்களையும் ஏமாற்றி வருகிறார். அவரது மாய வலையில் தொண்டர்கள் விழ வேண்டாம்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தினகரன் எப்படி வெற்றி பெற்றார் என்று எல்லோருக்கும் தெரியும். 20 ரூபாய் நோட்டை காட்டி தினகரனை தொகுதி மக்கள் தேடி கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அவர் நெல்லை, விருதுநகர் என்று சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
பொய்யான வாக்குறுதியை கொடுத்து மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கிய தினகரனை இப்போது ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் தேடி கொண்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்ட மோசடி நபர் அ.தி.மு.க.வை கைப்பற்றுவேன் என்கிறார்.
தினகரனை நம்பி சென்ற 18 எம்.எல்.ஏ.க்கள் சகதியில் காலை விட்டவர் கதைபோல இருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் தொகுதியிலும் வளர்ச்சி பணிகள் தங்குதடையின்றி நடைபெற்று வருகின்றன.
ஏனென்றால் அந்த எம்.எல்.ஏ.க்களுக்காக மக்கள் வாக்களிக்கவில்லை. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தன் ரத்தத்தை சிந்தி வெற்றியை பெற்று தந்தார். ஜெயலலிதாவுக்காக மக்கள் வாக்களித்தனர்.
எனவே தான் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அந்த 18 சட்டமன்ற தொகுதிகளிலும் தொடர்ந்து வளர்ச்சி பணிகளையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.
தமிழ்நாட்டில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க. மீது வீண்பழிகளை சுமத்தி வருகிறார்கள். அது மக்கள் மன்றத்தில் எடுபடாது.
ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை, சேலம் 8 வழிச்சாலை திட்டம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளில் மக்களை தூண்டிவிட்டு சிலர் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள். பொதுமக்களை குழப்பி வரும் சமூக விரோதிகள் மீது அ.தி.மு.க. அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
அ.தி.மு.க. மக்கள் நலனுக்காக தொடங்கப்பட்ட இயக்கம். எனவே மக்களின் நல்வாழ்வுக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் கொண்டு வந்துள்ளது. தற்போது நாம் அனைவரும் பெருமைப்படும் வகையில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரைக்கு கிடைத்துள்ளது. இது அ.தி.மு.க.அரசு செய்த மகத்தான சாதனையாகும். இதன் மூலம் 19 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 3 கோடி பேர் பயனடைவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார். #TTVDhinakaran #Jayalalitha
சேலம்:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேற்று கோடைவிழா-மலர்கண்காட்சி தொடங்கியது. வருகிற 16-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் இந்த கோடைவிழா-மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். ஏற்காடு கலையரங்கத்தில் நடந்த தொடக்க விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எல்லோரும் எளிதில் அணுகும் முதல்வராக உள்ளார். அமைச்சராக இருந்ததை விட முதல்வரான பிறகு அவர் மிக எளிமையாக இருக்கிறார். முதல்வர் பொறுப்பு என்பது மிகவும் கடுமையானது. அந்த சூழலிலும் அவர் சிறப்பாக செயல்படுகிறார்.
தமிழகத்தில் இன்றைக்கு சாலையில் நடந்து செல்லும் யார், யாரோ? முதல்-அமைச்சர் கனவு காண்கிறார்கள். குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர், எப்போது எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி கலையும்? நாம் முதல்-அமைச்சர் ஆகிவிடலாம்? என்று கனவு காண்கிறார். தகுதியில்லாமல் அவர் தரக்குறைவாக செயல்படுகிறார். அவரது கனவு ஒருபோதும் நிறைவேறாது.
முதல்- அமைச்சர் பதவி என்பது இறைவனின் அருள் இருந்தால் மட்டுமே கிடைக்கும். கடினமாக உழைக்க வேண்டும். மக்களை பற்றி சிந்திக்க வேண்டும். இந்த 2 விஷயங்களும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இருப்பதை காணமுடிகிறது. அவரது ஸ்டைல் வித்தியாசமானது. இதனால் சிறப்பாக ஆட்சி நடத்துகிறார்.
‘‘என்னையா இது.. அம்மா ஆட்சியை விட பயங்கரமாக போய்கிட்டு இருக்கு’’.. எங்கு பார்த்தாலும், டி.வி.யை பார்த்தாலும் முதல்-அமைச்சர் தமிழகத்தில் அதை செய்தார், இதை செய்தார் என கேட்க முடிகிறது.
காலையில் 10 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு முதல்-அமைச்சர் கோட்டைக்கு வந்ததும், 10 இலாகாக்கள் அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அமைச்சர்களை அழைத்து ஆலோசனை நடத்துகிறார். நான் புதிய அமைச்சராக இருப்பதால் இது எனக்கு புரிவதில்லை.
அவர், ஏற்கனவே அம்மா காலத்தில் அமைச்சராக இருந்ததால் நல்ல டிரெயினிங் கொடுத்து மிக சிறப்பாக செதுக்கி செதுக்கி இருக்கிறார்கள். எனக்கு பிறகும் அ.தி.மு.க. 100 ஆண்டுகள் இருக்கும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே கூறி இருந்தார். அது எடப்பாடி பழனிசாமியை மனதில் வைத்து தான் அவர் சொல்லி உள்ளார்.
மத்திய அரசுக்கு ‘ஜால்ரா‘ போடுவதாக எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட கட்சியினர் விமர்சித்து வருகிறார்கள். மக்களுக்கு தேவையான திட்டங்களையும், சலுகைகளையும் மத்திய அரசிடம் கேட்டு பெறுவது ‘ஜால்ராவா‘?. நல்ல விஷயங்களை மக்களுக்கு அவர் செய்து வருகிறார்.
இன்றைக்கு தி.மு.க.செயல் தலைவருடன் இருக்கும் 9 கட்சி தலைவர்களும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் உருவாக்கி ஆளாக்கப்பட்டவர்கள். அதை மறந்துவிட்டு தற்போது அ.தி.மு.க. அரசை குறை கூறுகிறார்கள். ஆனால் அவர்களால் தேர்தல் வந்தால் கவுன்சிலர் கூட ஆக முடியாதது.
ஹஜ் பயணிகளுக்கு சலுகை ரத்து, முத்தலாக் பிரச்சினை என இதர பிரச்சினைகளிலும் இஸ்லாமிய மக்களின் நன்மைக்காக நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க.வினர் குரல் கொடுத்தனர் என்பதை மறந்து விடக்கூடாது.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை 32 மாவட்டங்களிலும் வெற்றிகரமாக நடத்தி அந்தந்த மாவட்ட வளர்ச்சிக்கு என்ன திட்டங்கள் தேவை? என கண்டறிந்து அவற்றை தொடங்கி வைத்த பெருமை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையே சேரும். மக்களுக்கு தேவையான திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றி வருகிறது. இதனால் இந்த அரசை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.
இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்